துப்பாக்கி பாதுகாப்புடன் பள்ளி செல்லும் குழந்தைகள் - காரணம் என்ன...?


துப்பாக்கி பாதுகாப்புடன் பள்ளி செல்லும் குழந்தைகள் - காரணம் என்ன...?
x
தினத்தந்தி 17 Sep 2022 4:56 AM GMT (Updated: 17 Sep 2022 5:01 AM GMT)

பள்ளிக் குழந்தைகளை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவும், ரேபிஸ் வைரஸ் தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

மேலும், தெருநாய்களுக்கு உணவு கொடுப்பவரே அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பேக்கல் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் குழந்தைகளை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் பள்ளிக்குச் செல்லவே குழந்தைகள் பயப்படுகின்றனர். குழந்தைகளைப் பாதுகாக்கவே இந்த ஏர் கன் துப்பாக்கியை ஏந்தியபடி மாணவியரை அழைத்துச் செல்கிறேன் என தெரிவித்தார்.

மாநில அரசின் தகவல் படி 2022ல் இதுவரை கேரளாவில் 21 பேர் வெறிநாய்க்கடியால் இறந்துள்ளனர். அவர்களில், பாதிக்கப்பட்ட ஐந்து பேர், அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி ரேபிஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர்.

கேரளாவில் வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசிகள் பயனற்றதாக மாறி வருகிறது. இது குறித்து சமீபகாலமாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 1.5 கோடி நாய்கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் (27,52,218), அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (20,70,921), மராட்டியம் (15,75,606) மற்றும் மேற்கு வங்காளத்தில் (12) ,09,232). மறுபுறம், லட்சத்தீவில் இதே காலகட்டத்தில் நாய் கடி வழக்குகளே இல்லை இது 2020 இல் 46,33,493 ஆகவும், ஒரு வருடம் கழித்து 17,01,133 ஆகவும் குறைந்துள்ளது.

இருப்பினும், 2022 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 14.5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தமிழ்நாட்டில் (251,510) மற்றும் மராட்டியத்தில் (231,531) பதிவாகியுள்ளன. இந்தியாவும் ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட ரேபிஸ் வழக்குகள் மற்றும் இறப்புகளைப் பதிவு செய்கிறது.

இருப்பினும், செல்லப்பிராணிகளை விட தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகம். 2019 கணக்கின்படி, இந்தியாவில் 1,53,09,355 தெருநாய்கள் உள்ளன, இது 2012 இல் 1,71,38,349 ஆகக் குறைந்துள்ளது. உத்தரப் பிரதேசம் (20,59,261), ஒடிசா (17,34,399) மற்றும் மரட்டியத்தில் அதிக எண்ணிக்கையிலான தெருநாய்கள் காணப்படுகின்றன. (12,76,399) மணிப்பூர், லட்சத்தீவு மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய இடங்களில் தெருநாய்கள் இல்லை.


Next Story