தாஜ்மஹாலைப் பார்வையிட வந்த வெளிநாட்டு பயணிக்கு கொரோனா: பயணி தலைமறைவு


தாஜ்மஹாலைப் பார்வையிட வந்த வெளிநாட்டு பயணிக்கு கொரோனா: பயணி தலைமறைவு
x

தாஜ்மஹாலைப் பார்வையிட அர்ஜென்டினாவில் வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் திடீரென தலை மறைவாகி உள்ளார்.

ஆக்ரா,

சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், டிசம்பர் 26 அன்று தாஜ்மஹாலைப் பார்வையிட அர்ஜென்டினாவில் வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு கொரோனா சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியான நிலையில், அவர் தலை மறைவங்கியுள்ளார். இதனையடுத்து அவரை தேடும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story