விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 1 Dec 2022 8:36 PM GMT (Updated: 1 Dec 2022 8:36 PM GMT)

காதலி திருமணத்துக்கு மறுத்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கமகளூரு, டிச.2-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூர் மேதர் தெருவை சேர்ந்தவர் யோகேஷ் (வயது 25). இவரும், அதேப்பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். நெருங்கி பழகி வந்த அவர்கள், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமும் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர்கள் பல இடங்களில் ஜோடியாக சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில், யோகேஷ் அந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். ஆனால் திருமணத்துக்கு அந்த இளம்பெண் மறுத்ததாக தெரிகிறது. இதனால் யோகேஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர், விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காதலி திருமணத்துக்கு மறுத்ததால் யோகேஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆல்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story