காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை


காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 24 July 2023 6:45 PM GMT (Updated: 24 July 2023 6:45 PM GMT)

பெங்களூருவில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

பெங்களூரு:

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் அருகே ஜி.எஸ்.நகரில் வசித்து வந்தவர் நவீன் (வயது 27). இவரது சொந்த ஊர் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் ஆகும். அவர், மகாலட்சுமி லே-அவுட்டில் பெற்றோருடன் தங்கி இருந்து வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் நவீனின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் தனியாக இருந்த நவீன் திடீரென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த தந்தை வீட்டுக்கு வந்த போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், மகாலட்சுமி லே-அவுட் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் நவீன் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாருக்கு கிடைத்தது.

அதில், தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அவர் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், அதனால் தற்கொலை முடிவை எடுப்பதாகவும் எழுதி வைத்திருந்தார்.

நவீன் ஒரு இளம்பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்துள்ளார். அந்த பெண் சமீபமாக நவீனுடன் பேசுவதை நிறுத்திவிட்டதுடன், காதலையும் முறித்து கொண்டார். காதல் தோல்வியால் மனம் உடைந்து நவீன் தற்கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தற்கொலை செய்த நவீ்னின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் காதலை கைவிட்டதால் மனம் உடைந்து வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story