தெலுங்கானா முதல்-மந்திரியின் பெயரை பச்சைக் குத்திய பெண் மந்திரி


தெலுங்கானா முதல்-மந்திரியின் பெயரை பச்சைக் குத்திய பெண் மந்திரி
x

தெலுங்கானாவில், பெண் மந்திரி ஒருவர், முதல்-மந்திரி பெயரை தனது கையில் பச்சைக்குத்தியுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில், பெண் மந்திரி ஒருவர், முதல்-மந்திரி பெயரை தனது கையில் பச்சைக்குத்தியுள்ளார். தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தின் 10-வது ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா பவனில் பழங்குடியினர் கலாச்சார விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தெலுங்கானா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி சத்யவதி ரத்தோட், அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பெயரை, தனது கையில் பச்சைக்குத்தி, கட்சி மீதான தனது பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.


Next Story