காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி


காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி
x

கோப்புப்படம்

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி ஒருவர் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு,

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் நேற்று காலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பயங்கரவாதிகள் சிலரின் நடமாட்டம் இருப்பதும், அவர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயற்சிப்பதும் கண்டறியப்பட்டது.

உடனடியாக உஷாரான வீரர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

இந்த அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சம்பவ இடத்தில் தேடுதல் நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது. ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் காஷ்மீர் எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story