புனித யாத்ரீகர்கள் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது; 22 பேர் உயிரிழப்பு


புனித யாத்ரீகர்கள் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது; 22 பேர் உயிரிழப்பு
x

மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட் புறப்பட்டு சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.



டேராடூன்,



மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்டின் யமுனோத்ரி நோக்கி புனித யாத்ரீகர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர்.

பேருந்து யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் பலர் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. பேருந்து விபத்தில் சிக்கியதற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story