கான்கிரீட் தளம் இடிந்து கால்வாய்க்குள் விழுந்த ஜேசிபி எந்திரம்...!


கான்கிரீட் தளம் இடிந்து கால்வாய்க்குள் விழுந்த ஜேசிபி எந்திரம்...!
x

பெங்களூரு அருகே மைதானத்தை சுத்தப்படுத்தும் போது கான்கிரீட் தளம் இடிந்து ஜேசிபி எந்திரம் கால்வாய்க்குள் விழுந்ததில் டிரைவர் காயம் அடைந்தார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜிநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஜே.சி.பி. எந்திரம் மூலம் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அப்போது மைதானத்தையொட்டியுள்ள கால்வாய் மீது ஜே.சி.பி. எந்திரம் நின்று கொண்டு இருந்தது.

இதில் பாரம் தாங்காமல் கான்கிரீட் தளம் இடிந்து ஜே.சி.பி. எந்திரம் கால்வாய்க்குள் விழுந்தது. இதனால் ஜேபிசி எந்திரத்தின் கண்ணாடியில் விரிசல் விழுந்தது. மேலும் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கால்வாயில் சிக்கி இருந்த ஜே.சி.பி. எந்திரம் பொக்லைன் மூலம் மீட்கப்பட்டது.


Next Story