காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? - அக்டோபர் 17-ந் தேதி தேர்தல்


காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? - அக்டோபர் 17-ந் தேதி தேர்தல்
x
தினத்தந்தி 28 Aug 2022 10:32 AM GMT (Updated: 28 Aug 2022 11:47 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் முதுபெரும் கட்சியான காங்கிரஸ், கடந்த 2014, 2019 என தொடர்ந்து இரு நாடாளுமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து படுதோல்வியைத் தழுவியது. கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக காங்கிரசிலிருந்து விலகி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் உயரதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்தவாறு சோனியா காந்தியும், ராகுல், பிரியங்காவும் காணொலிக்காட்சி வழியாக கலந்து கொண்டுள்ளனர்.

கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணை கூட்டத்தில் இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் விலகிய நிலையில் கூட்டம் நடைபெறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. உட்கட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய காரியக்குழு கூட்டத்தில் சோனியா காந்திக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆன தங்கள் ஆதரவை காரியக்குழு உறுப்பினர்கள் உறுதிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story