பீகார்: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு


பீகார்: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு
x

பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பாட்னா,

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மது விலக்கு அமலில் உள்ள நிலையில் சிலர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்த்து விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற கள்ளச்சாராயத்தை வாங்கி குடிப்பர்களில் பலர் உயிரிழந்து வரும் சம்பங்களும் அரங்கேறி வருகிறது.

இதனிடையே, அம்மாநிலத்தின் கிழக்கு சம்பரன் மாவட்டம் மொதிஹரி, துர்குலியா மற்றும் பஹர்பூர் கிராமத்தை சேர்ந்த சிலர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் நேற்று வரை 26 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் இன்று பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராய கடத்தல் கும்பலை சேர்ந்த 26 பேர் உள்பட மொத்தம் 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story