கேரள சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 7-ந்தேதி தொடக்கம்


கேரள சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 7-ந்தேதி தொடக்கம்
x

கூட்டத்தொடரின் முதல் நாளில் உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 7-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமையன்று கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவை ஒத்திவைக்கப்பட உள்ளது.

தொடர்ந்து ஆகஸ்ட் 11 மற்றும் 18 ஆகிய தேதிகள் அதிகாரப்பூர்வமற்ற விஷயங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர சட்டத்தை மாற்றுவதற்கான மசோதா, கூட்டுறவு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட உள்ளது. ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சபை கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story