ரெயில் டிரைவர் மயங்கி விழுந்து சாவு


ரெயில் டிரைவர் மயங்கி விழுந்து சாவு
x

உடுப்பி அருகே ரெயில் டிரைவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மங்களூரு;

உடுப்பி மாவட்டம் மணிபால் புறநகர் பகுதியை சேர்ந்தவர் மங்கல்தாஸ் நாயக் (வயது 51). இவர் கொங்கன் ரெயில்வேயில் ரெயில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் நேத்ராவதி விரைவு ரெயிலை இயக்கி கொண்டிருந்தார்.

அவருக்கு கைவலி இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை சகஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து மணிப்பால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்க வந்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story