நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ந்தேதி தொடக்கம்


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ந்தேதி தொடக்கம்
x

கோப்புப்படம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ந்தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் 3-வது வாரம் தொடங்கி டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக முடிவடையும். ஆனால், தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து வருவதால், அரசியல் கட்சிகள் தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் முடிவுகள், டிசம்பர் 3-ந் தேதி வெளியாக உள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் டிசம்பர் 4-ந்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து டிசம்பர் 22-ந்தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.


Next Story