ஓட்டலில் ரூ.50 ஆயிரம் திருட்டு; மர்மநபருக்கு வலைவீச்சு


ஓட்டலில் ரூ.50 ஆயிரம் திருட்டு; மர்மநபருக்கு வலைவீச்சு
x

மடிகேரி அருகே ஓட்டலில் ரூ.50 ஆயிரம் திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

குடகு;


குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா கோகினூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓட்டலின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இரவு வேலை முடிந்து ஷெட்டரை பூட்டிவிட்டு சென்றனர். அ

ப்போது மர்மநபர் ஒருவர் ஓட்டலின் ஷெட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தையும், அங்கிருந்த சில பொருட்களையும் திருடிவிட்டு தப்பி சென்றார். இதையடுத்து நேற்று காலை ஓட்டல் உரிமையாளர் வந்து பார்த்தபோது ஷெட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், 3 வாகனங்களின் ஆவணங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் திருடிபோய் இருந்தது. இதுகுறித்து உரிமையாளர் மடிகேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகைள ஆய்வு செய்தனர். இதில் மர்மநபர் திருட்டில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story