இந்திய ஒற்றுமை யாத்திரையால் போக்குவரத்து பாதிப்பு: கேரள ஐகோர்ட்டில் வழக்கு


இந்திய ஒற்றுமை யாத்திரையால் போக்குவரத்து பாதிப்பு:  கேரள ஐகோர்ட்டில் வழக்கு
x

இந்திய ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.



கொச்சி,



காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது. 13-வது நாளான இன்று கேரளாவின் சேர்தலா பகுதியில் இருந்து யாத்திரை தொடங்கியது. கொச்சி மாவட்டத்தில் இன்றிரவு முகாம் இடப்படுகிறது.

இந்த நிலையில், கேரள ஐகோர்ட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்திய ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என குறிப்பிட்டு உள்ள அவர், கேரளாவில் சாலையின் பாதி பகுதியிலேயே யாத்திரை செல்ல அனுமதி வழங்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.

இந்த மனுவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கேரள பிரதேச காங்கிரஸ் தலைவர் சுதாகரன் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர். இந்த மனு மீது நாளை மறுநாள் ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது.


Next Story