திரிபுரா சட்டசபை தேர்தல்; காலை 9 மணி நிலவரப்படி 13.23% வாக்குகள் பதிவு


திரிபுரா சட்டசபை தேர்தல்; காலை 9 மணி நிலவரப்படி 13.23% வாக்குகள் பதிவு
x

திரிபுரா சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.23% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

அகர்தலா,

வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேகாலயா மற்றும் நாகலாந்தில் வருகிற 27-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

திரிபுராவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் வருகிற மார்ச் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிபுராவில் அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.

இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர்கள் காலையிலேயே வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், திரிபுரா சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.23% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.


Next Story