லாரி-கார் மோதல்; 3 பேர் பலி


லாரி-கார் மோதல்; 3 பேர் பலி
x

லாரி-கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

துமகூரு:

துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்தவர்கள் சிவக்குமார், ஹேமந்த்(வயது 28), ஆகாஷ்(20). இவர்கள் உள்பட 4 பேர் காரில் பெங்களூருவுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பாவகடா நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்களது கார் மதுகிரி தாலுகா மிடிகேசி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சாலையின் எதிரே வந்த லாரி மற்றும் அவர்களது கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மிடிகேசி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் பாவகடாவை சேர்ந்தவர்கள் என்பதும், பெங்களூருவுக்கு சென்றுவிட்டு திருப்பி வரும் வழியில் விபத்தில் சிக்கியதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story