காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு; பாதயாத்திரை தொடரும் என காங்கிரஸ் துணிச்சலான அறிவிப்பு


காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு; பாதயாத்திரை தொடரும் என காங்கிரஸ் துணிச்சலான அறிவிப்பு
x

காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்தபோதும், பாதயாத்திரை தொடரும் என காங்கிரஸ் துணிச்சலாக அறிவித்து உள்ளது.



புதுடெல்லி,


காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரிலான பாதயாத்திரையை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை, கடந்த 18-ந்தேதி ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்தது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். இதற்கு கவர்னர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டு கொண்டார். உடனடியாக, உறுதியான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் போலீசாரிடம் கேட்டு கொண்டார்.

இந்த சூழலில், காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்ததுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, காஷ்மீர் துணை நிலை கவர்னரை நான் சந்தித்து பேசினேன். காஷ்மீரில் உள்ள எங்களுடைய அனைத்து தலைவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வது என்பது அவர்களுடைய பொறுப்பு. என்ன நடந்தபோதும், இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story