டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 மாத தேடுதல் வேட்டைக்கு பின் குற்றவாளிகளை கைது செய்த போலீஸ்!


டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 மாத தேடுதல் வேட்டைக்கு பின் குற்றவாளிகளை கைது செய்த போலீஸ்!
x
தினத்தந்தி 6 Aug 2022 6:48 AM GMT (Updated: 6 Aug 2022 6:52 AM GMT)

போலீசாரின் தீவிர முயற்சியால் தப்பிச்சென்ற இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள டெல்லியின் ராஜீவ் சவுக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் இரண்டு நபர்களால் பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்தப்பட்டார்.

இந்த சம்பவத்தை கடந்த மே மாதம் 3ம் தேதியன்று, பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் அந்த பெண், போலீசிடம் புகார் அளித்தார்.

இதனை அடுத்து போலீசார் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகளை அடையாளம் காணவும், அவர்களைப் பிடிக்கவும் பல குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட மூன்று மாதங்களை கடந்துவிட்ட நிலையில், நேற்று அந்த குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் தீவிர முயற்சியால் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துவிட்டு தப்பிச்சென்ற இருவரும் கையும்களவுமாக நேற்று பிடிபட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள லவ் பாக்கா மற்றும் ஷிவ் ஓம் குப்தா ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் உறுதியானது. அதில் ஒருவர், ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருபவர் என்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் அவருடன் துணை நின்ற இன்னொருவர் முதுநிலை மேலாண்மை எம்பிஏ படித்து வருபவர் என்பது தெரிய வந்தது.

சமுதாயத்தில் உயர்ந்த நல்ல நிலையில் வசதி படைத்த இந்த நபர்கள், இத்தகைய கீழத்தரனமான நடவடிக்கையில் ஈடுபட்டது போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் குற்றவாளிகளை தப்பிக்க விடாமல், மூன்று மாதம் தீவிரமாக விசாரணை செய்து கண்டுபிடித்து கைது செய்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன.


Next Story