கேரளாவில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து - தொழிலாளி காயம்


கேரளாவில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து - தொழிலாளி காயம்
x

கோப்புப்படம்

கேரளாவில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி காயமடைந்தார்.

காசர்கோடு,

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மேம்பாலத்தின் ஒரு பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.

அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டிட தொழிலாளி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்தை மக்களவை எம்பி ராஜ்மோகன் உன்னிதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.


Next Story