உத்தர பிரதேசம்; மசூதி சுவற்றில் சர்ச்சை வாசகம் ; போலீஸ் தீவிர விசாரணை


உத்தர பிரதேசம்; மசூதி சுவற்றில் சர்ச்சை வாசகம் ; போலீஸ் தீவிர விசாரணை
x

உத்தர பிரதேசம் அலிகார் மாவட்டத்தில் உள்ள மசூதியின் சுவற்றில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை வாசகங்கள் எழுதிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அலிகார்,

இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் சித்திரம் வரைந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை மசூதியின் வெளிப்புற சுவற்றில் மர்ம நபர்கள் எழுதிச்சென்றது உத்தரபிரதேசத்தின் அலிகாரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அலிகார் மாவட்டத்தில் உள்ள மஹூவா கேரா என்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் கேஷோபுர் கத்ரனா என்ற இடத்தில் இருக்கும் மசூதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மசூதி சுவற்றில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டதையடுத்து, உடனடியாக மசூதியின் பொறுப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story