'கொலை செய்வது எப்படி' - கூகுளில் பார்த்து மனைவியை கொன்ற கணவன்


கொலை செய்வது எப்படி - கூகுளில் பார்த்து மனைவியை கொன்ற கணவன்
x

கோப்புப்படம்

'கொலை செய்வது எப்படி' என்று கூகுளில் தேடி மனைவியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுடெல்லி,

உத்தரப் பிரதேசத்தில் 'கொலை செய்வது எப்படி' என்று கூகுளில் தேடி மனைவியை கொலை செய்த நபரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காஜியாபாத்தில் உள்ள மோடிநகரில் வசிப்பவர் விகாஸ். இவரது மனைவி சோனியா. கடந்த வெள்ளிக்கிழமை ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோனியாவிடம் கொள்ளையடிக்கப்பட்டதாக விகாஸ் போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், சோனியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு, சந்தேகத்தின் பேரில் விகாசைக் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விகாசின் போனை பரிசோதித்ததில், அவர் கூகுளில் 'கொலை செய்வது எப்படி', 'எங்கிருந்து துப்பாக்கி வாங்கலாம்' என்பது போன்ற இணையத் தேடல்களை மேற்கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும் இணைய வழி விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட்டில் இருந்து விஷம் வாங்க முயன்றதும் தெரிய வந்தது.

திருமணமான சில ஆண்டுகளுக்குப் பிறகு, விகாசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் சோனியாவுக்கும் விகாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விகாஸ் சோனியாவை கொலை செய்ய அவரது பெண் தோழியுடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார்.

இந்த நிலையில் விகாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது பெண் தோழியை விரைவில் கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டுபிடித்த போலீஸ் குழுவினருக்கு ரூ.25 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story