உத்தரப்பிரதேசம்: மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலி


உத்தரப்பிரதேசம்: மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலி
x
தினத்தந்தி 20 Aug 2022 3:27 AM GMT (Updated: 20 Aug 2022 4:01 AM GMT)

மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு 2 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

மதுரா,

இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் பிறந்த ஊராக கருதப்படும் உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் கொண்டாட்டங்கள் களைகட்டியது.

அதன்படி, மதுராவில் உள்ள பாங்கே பிஹாரி கிருஷ்ணர் கோவிலில் நள்ளிரவு கொண்டாடங்கள் நடைபெற்றது. அதில் பங்கேற்க அதிக அளவு பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அப்போது வழிபாட்டின் போது கோவிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு 2 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


Next Story