ராமர் கோவில் கட்டுமானப்பணியை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் - யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்


ராமர் கோவில் கட்டுமானப்பணியை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் - யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்
x

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணியை திட்டமிட்ட காலத்தில் முடிக்க வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.

யோகி ஆதித்யநாத் ஆலோசனை

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஓட்டல் ஒன்றில், பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், அயோத்தியில் நடைபெறும் தீப உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ளும்படியும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ராமர் கோவில் கட்டுமானப்பணி

மேலும் யோகி ஆதித்யநாத், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணியை திட்டமிட்ட காலத்தில், உயர்ந்த தரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ராம ஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் வழிபாடும் மேற்கொண்டார்.

தொழிலாளர்களுடன் உரையாடல்

பின்னர், ராமர் கோவில் கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து அதன் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக அலுவலர்களிடமும் விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடனும் உரையாடினார்.


Next Story