உத்தரகாண்ட் சுரங்க விபத்து: நாளை அதிகாலைக்குள் அனைவரும் மீட்கப்படுவர் - மீட்புப்படையினர் உறுதி


உத்தரகாண்ட் சுரங்க விபத்து: நாளை அதிகாலைக்குள் அனைவரும் மீட்கப்படுவர் - மீட்புப்படையினர் உறுதி
x

900 மீ குழிக்குள் 800 மீ குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

உத்தரகாசி ,

உத்தரகாண்ட் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் இன்று 11வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நுண் சுரங்கப்பாதைக்கு கிடைமட்ட துளையிடல், செங்குத்து மீட்பு சுரங்கப்பாதைக்கான கட்டுமானம் போன்ற பணிகளை மேற்கொண்டு, தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கிடைமட்ட துளையிடம் மூலமாக 39 மீட்டர் குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இது 45-50 மீட்டர் செலுத்தும் வரை தொழிலாளர்களை மீட்கும் நேரத்தை சரியாக கணிக்க முடியாது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். இன்று அல்லது நாளைக்குள் 41 தொழிலாளர்களையும் மீட்பதற்கான பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மீட்பு அதிகாரி பாஸ்கர் குல்பே கூறுகையில்,

சுரங்கத்தில் சிக்கியவர்கள் நலமுடன் உள்ளனர். சுரங்கத்தின் மற்றொரு பக்கம் துளையிட்டு வருகிறோம். இன்றிரவு அல்லது அதிகபட்சம் நாளை அதிகாலை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். 900 மீ குழிக்குள் 800 மீ குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. 67 மீட்டர் நீளத்தில் 39 மீட்டருக்கு தோண்டும் பணி முடிந்துள்ளது.

18 மீட்டர் மட்டுமே இன்னும் தோண்ட உள்ளதால் இன்றிரவுக்குள் மீட்புப்பணி நிறைவடையும் என நம்பிக்கை உள்ளது என்றார். தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.

சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 41 பேரில் 15 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், உத்தர பிரதேசம் (8), பிகார் (5), ஒடிசா(5), மேற்கு வங்கம் (3), உத்தரகாண்ட் (2), அசாம்(2), இமாசல பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளனர்.


Next Story