வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு - தண்டனையை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைப்பு


வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு - தண்டனையை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைப்பு
x

வாச்சாத்தி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை இறுதி வாரத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதி எம்.திரிவேதி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட அண்ணாதுரை, சீனிவாசனை இரண்டு வாரங்களுக்குள் சிறையில் சரணடைய உத்தரவிட்ட நீதிபதி, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பான விரிவான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்ட நீதிபதி, மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை இறுதி வாரத்திற்கு ஒத்திவைத்தார்.




Next Story