துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது


துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
x

துணை ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைந்தது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் (71), எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா (80) ஆகியோர் போட்டியிட்டனர்.

மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்ந்து 780 எம்.பி.க்கள் உள்ளனர். இதில், 725 பேர் வாக்களித்தனர். 92.9 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலின் முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகும் எனத்தெரிகிறது. ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு அதிகம் உள்ளதால் அவர் வெற்றிபெறுவது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட ஒன்று எனக்கூறப்படுகிறது.


Next Story