ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறையை தூண்டிவிட்டு பாஜக ஆதாயத்தை தேடுகிறது - மல்லிகார்ஜூன கார்கே


ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறையை தூண்டிவிட்டு பாஜக ஆதாயத்தை தேடுகிறது - மல்லிகார்ஜூன கார்கே
x

வலிமை குறைந்ததாக எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த வாரம் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களின்போது பீகார், மேற்குவங்காளம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் வன்முறை சம்பவம் நடந்தேறியது. பீகாரின் நலாந்தா, சஸாரம் போன்ற பகுதியில் கலவரம் ஏற்பட்டதில், ஒருவர் கொலை செய்யப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராம நவமி பண்டிகையில் ஏற்பட்ட வன்முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வலிமை குறைந்ததாக எப்போதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறையை தூண்டிவிட்டு பாஜக ஆதாயத்தை தேடுகிறது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வாதாட முடியாது ஆனால் மத்திய அரசுக்கு எதிராக போராடலாம். அவர்கள் (மையம்) அதானி வரிசையில் ஜேபிசியை உருவாக்க விரும்பவில்லை. நாடாளுமன்றம் செயல்படாது என்று திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story