பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு நிர்மலா சீதாராமன் வரவேற்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு நிர்மலா சீதாராமன் வரவேற்பு

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது.
Published on

புதுடெல்லி

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட் பதிவில் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:

"பணமதிப்பு நீக்கம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம். மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே 6 மாதங்களாக ஆலோசனைகள் நடந்தன. அத்தகைய நடவடிக்கையைக் கொண்டுவர நியாயமான தேவை இருந்தது.

மத்திய அரசில் இருந்து முன்மொழியப்பட்டதால் மட்டுமே இந்த முடிவெடுக்கும் செயல்முறை தவறானது என்று கருத முடியாது. பிரிவு 26(2) ஆர்பிஐ சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீக்க முடியாது. பொருளாதாரக் கொள்கை விஷயங்களில் மிகுந்த கட்டுப்பாடு இருக்க வேண்டும். நிபுணத்துவத்துடன் இருக்கும் நிர்வாகத்தை நீதிமன்றம் அதன் ஞானத்துடன் மாற்ற முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com