போதைப்பொருள் விற்ற வாலிபர் கைது


போதைப்பொருள் விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 July 2023 6:45 PM GMT (Updated: 24 July 2023 6:46 PM GMT)

மங்களூரு அருகே போதைப்பொருள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விற்பனை அதிகரித்துவிட்டது. இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் போலீசார் மங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கங்கனாடி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது படில் பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் பையுடன் சந்தேகம் இடமாக சுற்றி வந்தார். அந்த வாலிபரை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் வாலிபர் கங்கனாடியை அடுத்த குலசேகரா கிராமத்தில் உள்ள கோகர்ணாரோடு பகுதியை சேர்ந்த ஹர்ஷித் ஷெட்டி (வயது 29) என்று தெரியவந்தது.இதையடுத்து அவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். பையில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 25 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹர்ஷித் ஷெட்டியை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கைதான ஹர்ஷித் ஷெட்டி மீது கங்கனாடி, உல்லால், மங்களூரு, உடுப்பியில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் என 9 வழக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிட தக்கது.


Next Story