16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 3 ஆண்டு சிறை


16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்:  வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:47 PM GMT)

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

உடுப்பி-

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கல்லூரி மாணவி

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா டவுன் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறாள். அவள் அப்பகுதியில் உள்ள தனியார் பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாள். இந்தநிலையில், மாணவி கல்லூரிக்கு செல்லும்போது அதேப்பகுதியை சேர்ந்த அனூப் (வயது20) என்பவர் பேசி வந்துள்ளார். பின்னர் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர்.

இ்தையடுத்து சிறுமியை, அனூப் உடுப்பி, மங்களூரு, கார்வார் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளார். மேலும் சிறுமி வீட்டில் யாரும் இல்லாதபோது அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சிறுமியை, அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில், கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் சிறுமியை, அனூப் உடுப்பிக்கு அழைத்து சென்றார்.

பாலியல் பலாத்காரம்

அவர்கள் 2 பேரும் சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அனூப் பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என சிறுமியை அவர் மிரட்டி உள்ளார். இந்தநிலையில் சிறுமி சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளாள். இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் கேட்டனர். அப்போது தனக்கு நடந்த கொடுமைகளை சிறுமி கூறி கதறி அழுதாள். இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசில் புகார்

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குந்தாப்புரா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனூப்பை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு உடுப்பி மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. குந்தாப்புரா போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சீனிவாச சுவர்ணா நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அனூப்பிற்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story