விபசார தொழில் நடத்திய 3 பேர் சிக்கினர்
பெங்களூருவில் விபசார தொழில் நடத்திய 3 பேர் சிக்கினர்.
பெங்களூரு:
பெங்களூரு ஜே.பி.நகர் மற்றும் இந்திராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த 2 மசாஜ் சென்டர்களிலும் போலீசார் சோதனை நடத்திய போது பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, விபசார தொழில் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தாா்கள்.
கைதான 3 பேரிடம் இருந்து 8 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக ஜே.பி.நகர், இந்திராநகர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story