முக்கோண காதல் விவகாரம்: கல்லூரி மாணவி, வாலிபருக்கு கத்திக்குத்து-ஓட்டல் தொழிலாளி கைது


முக்கோண காதல் விவகாரம்:  கல்லூரி மாணவி, வாலிபருக்கு கத்திக்குத்து-ஓட்டல் தொழிலாளி கைது
x

காதலித்து விட்டு மற்றொரு வாலிபருடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவி மற்றும் அவரது நண்பர் ஆகிய 2 பேரையும் கத்தியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

குடகு:

காதல் ஜோடி மீது தாக்குதல்

குடகு மாவட்டம் குஷால்நகர் அரசு கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று தனது நண்பர் ஒருவருடன் காவிரி வனச்சரணாலயத்திற்கு சென்றிருந்தார். வனப்பகுதியில் இரண்டு பேரும் அமர்ந்து இருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை தாக்கினார். இதில் மாணவியின் கழுத்து, தோள்பட்டை, கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த மாணவியின் நண்பர் அந்த வாலிபரை தடுக்க முயற்சித்தார். அப்போது வாலிபர், மாணவியின் நண்பரையும் தாக்கினார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு குஷால்நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குஷால்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஓட்டல் தொழிலாளி கைது

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரை கைது செய்தனர். இது தொடர்பாக அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் தொட்டகரவே கிராமத்தை சேர்ந்த விஜய் (22) என்று தெரியவந்தது. மேலும் அந்த கல்லூரி மாணவியும் இவரும் காதலித்து வந்ததாக கூறினார்.

இந்நிலையில் திடீரென்று வாலிபரை தன்னிடம் மாணவி பேசாமல் இருந்து வந்துள்ளார். மேலும் வேறுவொரு நபருடன் சேர்ந்து சுற்றி வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து பூங்காவிற்கு வந்ததும் தெரியவந்தது. இதை அறிந்து மாணவியை கொலை செய்யும் நோக்கில் பின்தொடர்ந்து சென்று கத்தியால் குத்தியதாக கூறினார். இதுகுறித்து குஷால்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story