ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் பிணமாக மீட்பு: மகனின் கதி என்ன?


ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் பிணமாக மீட்பு:  மகனின் கதி என்ன?
x

மைசூரு புறநகரில் ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் பிணமாக மீட்கப்பட்டார். மகனின் கதி என்ன வென்று தெரியவில்லை.

மைசூரு:

மைசூரு புறநகர் டி.நரசிப்புரா சாலையில் வருணா ஏரி அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த ஏரியில் மீன்பிடிக்க மைசூரு தாலுகா ஆரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த கவுரி சித்தய்யா(வயது 65), அவரது மகன் ரேவண்ணா(35) ஆகியோர் சென்றனர். ஆனால் அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் சித்தய்யாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் தீயணைப்பு துறையினர் மற்றும் நீச்சல் வீரர்களின் உதவியுடன் ஏரியில் சித்தய்யா மற்றும் ரேவண்ணாவை தேடினர். இதில் சித்தய்யா பிணமாக மீட்கப்பட்டார். ரேவண்ணாவின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து மைசூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story