இரைதேடி, ஊருக்குள் புகுந்த மான்


இரைதேடி, ஊருக்குள்   புகுந்த மான்
x

ஹாசன் பேளூருவில் இரைத்தேடி வந்த மான் வனத்துறையினரிடம் சிக்காமல் மீட்டு வனப்பகுதிக்கு சென்றது.

ஹாசன்:

ஹாசன் மாவட்டம் பேளூரு தாலுகா பிக்கோடு கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து மான் ஒன்று இரைதேடி பிக்கோடு கிராமத்திற்குள் புகுந்தது. அப்போது மானை, தெருநாய்கள் விரட்டி கடித்தது. இதில் காயமடைந்த மான், அந்த பகுதியில் பவன் என்பவரின் ஓட்டலுக்கு நுழைந்தது. மேலும் ஓட்டலில் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமானது. இதை பார்த்த ஓட்டல் உரிமையாளர் மானை உள்ளே வைத்து அடைத்தார். பின்னர் அவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், அந்த மானை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் மான், வனப்பகுதிக்குள் தப்பி சென்றுவிட்டது.

1 More update

Next Story