ஓணம் பண்டிகை: பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்


ஓணம் பண்டிகை: பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

ஓணம் பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

பெங்களூரு:

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கேரளாவில் வருகிற 8-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் பெங்களூரு சாந்திநகர் பி.எம்.டி.சி. பஸ் நிலையத்தில் இருந்து கண்ணூர், கோழிக்கோடு, எர்ணாக்குளம், பாலக்காடு, திருச்சூர், கோட்டயம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் www.ksrtc.karnataka.gov.in என்ற இணையதள முகவரியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு கே.எஸ்.ஆர்.டி.சி. கூறியுள்ளது.


Next Story