மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x

சிவமொக்கா மாவட்டம் பத்திராவதியில் மின்சாரம் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்தார்.

சிவமொக்கா:

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). இவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தை சுற்றி அரசு அனுமதி பெற்ற மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மின்வேலியின் வயர் அறுந்து பக்கத்தில் இருந்த முள்வேலி மீது விழுந்து கிடந்துள்ளது. அதில் மின்சாரம் பய்ந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் நாகராஜ், தனது வீட்டிற்கு சுற்றி செல்ல தாமதமாகும் என்பதால் அந்த முள்வேலியை தாண்டி கடக்க முயன்றார். அப்போது முள்வேலியில் கால் வைத்தபோது நாகராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலேஒன்னூர் போலீசார் பார்வையிட்டனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story