வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

அரிசிகெேரயில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஹாசன்:-

வரதட்சணை கொடுமை

ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா சங்கிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவா் பில்லய்யா. இவரது மகள் அபிலாஷா. இவருக்கும் துருவகெரேவை சேர்ந்த சந்திரய்யா என்பவரின் மகன் நாகேசுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது நாகேசுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

திருமணம் முடிந்த புதிதில் கணவன்-மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நாகேஷ், மனைவி அபிலாஷாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ெகாடுமைப்படுத்தி வந்துள்ளார்.

தற்கொலை

அவருடன் சேர்ந்து நாகேசின் பெற்றோர் சந்திரய்யா, ராதம்மா, உறவினர் அனுமந்தய்யா ஆகியோரும் அபிலாஷாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபிலாசாவுக்கு குழந்தை பிறந்தது. இதற்காக தனது தாய் வீட்டுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது நாகேஷ், தனக்கு அரசு வேலை வாங்க ரூ.3 லட்சத்தை வீட்டில் இருந்து வாங்கி வர வேண்டும் என்றும், இல்லை என்றால் வர வேண்டாம் என்றும் அபிலாஷாவிடம் கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அபிலாஷா நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

4 பேரிடம் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அரிசிகெரே துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ், ஜவகல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னா் போலீசார், அபிலாஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வரதட்சணை ெகாடுமையால் அபிலாஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அபிலாஷாவின் பெற்றோர், கணவர் குடும்பத்தினர் மீது ஜவகல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிலாஷாவின் கணவர் நாகேஷ், மாமனார் சந்திரய்யா, மாமியார் ராதம்மா மற்றும் அனுமந்தய்யா ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story