13 வயது மல்யுத்த வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை


13 வயது மல்யுத்த வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை
x

தாவணகெரே அருகே 13 வயது மல்யுத்த வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

தாவணகெரே அருகே 13 வயது மல்யுத்த வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா நகரில் உள்ள ஷிபாரா சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் காவ்யா பூஜார் (வயது 13). இவர் கர்நாடக மாநிலம் தார்வாரில் உள்ள மல்யுத்த பயிற்சி விடுதியில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் காவ்யா பூஜார் விடுமுறையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று காலை அவர் வழக்கம்போல் பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் ஒரு அறைக்குள் சென்ற அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

காரணம் என்ன?

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஹரிஹரா டவுன் போலீசார் விரைந்து வந்து, காவ்யா பூஜார் உடலை மீட்டனர். பின்னர் பெற்ேறாரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதையடுத்து தற்கொலை செய்த காவ்யா பூஜாரின் உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக ஹரிஹரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் எதுவும் எழுதிவைத்திருக்கிறாரா என போலீசார் வீடு முழுவதும் சோதனையிட்டனர். ஆனால் எந்த கடிதமும் போலீசாரிடம் சிக்கவில்லை.

போலீஸ் விசாரணை

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காவ்யா பூஜாரின் தற்கொலைக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story