சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்


சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 26 March 2023 12:15 AM IST (Updated: 26 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 2014-ம் ஆண்டு மே 14-ந் தேதி கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 34 வயது வாலிபர் சிறுமியை அவரது வீட்டுக்கு இழுத்து சென்று பலாத்காரம் செய்தார். பின்னர் ரூ.2 கொடுத்து நடந்ததை வெளியே சொல்ல கூடாது என சொல்லி அனுப்பினார். அழுது கொண்டே வீட்டுக்கு வந்த சிறுமி நடந்தது பற்றி பெற்றோரிடம் கூறினாள்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து ஆர்.சி.எப். போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு மீதான விசாரணை மும்பை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோா்ட்டு சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

1 More update

Next Story