தேர்வு பயம் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


தேர்வு பயம் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 March 2023 12:15 AM IST (Updated: 20 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செம்பூரில் தேர்வு பயம் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

செம்பூரில் தேர்வு பயம் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரசு பொதுத்தேர்வு

மும்பை செம்பூரை சேர்ந்த 15 வயது சிறுவன், அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். மராட்டியத்தில் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வை அந்த மாணவன் எழுதி வந்தான். இந்தநிலையில் தேர்வில் தோல்வி பயம் காரணமாக வீட்டில் யாரிடம் பேசாமல் பேசாமல் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவரது தாய் வெளியே சென்றதாக தெரிகிறது. அப்போது தனியாக இருந்த மாணவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் தற்கொலைக்கு தேர்வு தோல்வி பயம் தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story