23-வது மாடியில் இருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை- அந்தேரியில் சோகம்


23-வது மாடியில் இருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை- அந்தேரியில் சோகம்
x

அந்தேரியில் 23-வது மாடியில் இருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை,

அந்தேரியில் 23-வது மாடியில் இருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டார்.

காதல் விவகாரம்

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 14 வயது 10-ம் வகுப்பு மாணவன் பெற்றோருடன் வசித்து வந்தான். மாணவன், சிறுமி ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிறுமி நண்பர்களாக இருக்கலாம் என மாணவனிடம் கூறியுள்ளார். இதை மாணவனால் தாங்கி கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.

எனவே அவர் சம்பவத்தன்று இதுகுறித்து நண்பர்கள் சிலரிடம் வாட்ஸ்அப் மூலம் வருத்தத்துடன் கூறியதாக தெரிகிறது.

தற்கொலை

இந்தநிலையில் மாணவன் சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பின் 23-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மாணவன் கடைசியாக பேசிய குடும்பத்தினர், நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி காதலை ஏற்கவில்லை என்ற விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story