கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி


கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
x

நாலாச்சோப்ராவில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகினர்.

மாவட்ட செய்திகள்

வசாய்,

நாலாச்சோப்ராவில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகினர்.

குட்டையில் மூழ்கினர்

பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ரா கிழக்கு பெல்கார் பகுதியை சேர்ந்த சிறுவன் அம்ஜா அன்சாரி(வயது7). இவன் நேற்று மாலை ஜூனைத் மனிகார்(8) உள்பட 2 சிறுவர்களுடன் வெளியே விளையாட சென்றான். சிறிது தொலைவில் உள்ள கல்குவாரிக்கு சென்றனர். அங்கு குட்டையில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனை கண்ட சிறுவர்கள் உற்சாகம் அடைந்து வேடிக்கை பார்க்க சென்றனர்.

அப்போது அம்ஜா அன்சாரி, ஜூனைத் மனிகார் ஆகிய 2 சிறுவர்கள் கல்குவாரி குட்டையில் தவறி விழுந்தனர். 20 அடி ஆழமான இடத்தில் விழுந்த 2 பேரும் மூழ்கினர்.

2 சிறுவர்கள் பலி

இதனை கண்ட உடன் இருந்த மற்றொரு சிறுவன் வீட்டுக்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் தெரிவித்தான். இதன்படி பெற்றோர் உள்பட அக்கம்பக்கத்தினர் கல்குவாரி குட்டையில் இறங்கி சிறுவர்களை தேடினர். வெகுநேரம் தேடலுக்கு பிறகு தண்ணீரில் மூழ்கிய 2 சிறுவர்களையும் மீட்டனர். பின்னர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர் உயிரிழந்தாக தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story