கர்நாடகாவில் இருந்து ரூ.1 கோடி குட்கா கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்
மும்பை கோரேகாவ் பகுதியில் மராட்டியத்தில் கர்நாடகாவில் இருந்து ரூ.1 கோடி குட்கா கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்
மும்பை,
மும்பை கோரேகாவ் பகுதியில் மராட்டியத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த குட்கா பார்சல் இருந்ததை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வந்து மும்பையில் வினியோகம் செய்ய முயன்றது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குட்கா கடத்தி வந்த சித்து புஜாரி (வயது 40). சாபான் சாகேப் சேக் (33) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து குட்கா மற்றும் வாகனங்கள் என ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story