மும்பையில் தொடர்கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது


மும்பையில் தொடர்கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது
x

மும்பையில் தொடர்கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையில் தொடர்ச்சியாக பல வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பான புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொள்ளை சம்பவங்களில் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. சம்பவம் நடந்த இடத்தில் செல்போன் சிக்னல் கோபுரம் மூலம் விசாரித்ததில் ஒருவரின் அடையாளம் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மும்பையில் பதுங்கி இருந்த ரஷீத் கான் (வயது42) என்பவரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனது மைத்துனர் இப்ராகிம் கான் என்பவருடன் சேர்ந்து மும்பையில் பல அடுக்குமாடி குடியிருப்புகளின் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடி வந்தது தெரியவந்தது. திருடிய பணத்தில் குடும்பத்துடன் வெளியூர் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவர் கொடுத்த தகவலின்பேரில் மைத்துனர் இப்ராகிம் கானையும் கைது செய்தனர். இவர்கள் போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க அடிக்கடி செல்போன் எண்ணை மாற்றி வந்து உள்ளனர். இவர்களிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் பணம், நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story