விராரில் வியாபாரி மீது திராவகம் வீசிய 3 பேர் கைது


விராரில் வியாபாரி மீது திராவகம் வீசிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 July 2023 7:15 PM GMT (Updated: 11 July 2023 7:15 PM GMT)

விராரில் வியாபாரி மீது திராவகத்தை வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

விராரில் வியாபாரி மீது திராவகத்தை வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திராவகம் வீச்சு

பால்கர் மாவட்டம் விரார் கோபர்பாடாவை சேர்ந்தவர் மொபின் சேக். வியாபாரியான இவர் எல்.இ.டி. விளக்குகள் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 8-ந்தேதி தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வியாபாரி மொபின் சேக் மீது திராவகத்தை வீசி விட்டு தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 பேர் கைது

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் 3 பேரின் அடையாளமும் தெரியவந்ததை தொடர்ந்து மஸ்தான் உஸ்மான் சேக், சங்கேத் சர்மா, ஜேயேஷ் தாரே என்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மஸ்தான் சேக்கிற்கும், பாதிக்கப்பட்ட மொபின் சேக்கிற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து மொபின் சேக்கை பழிவாங்க 2 பேரிடம் ரூ.4 லட்சம் பேரம் பேசி திராவகத்தை வீசி சென்றதும் தெரியவந்தது. மஸ்தான் உஸ்மான் சேக் மீது ஏற்கனவே விரார் போலீசில் சில கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.



Next Story