வல்சாட்டில் வீடு புகுந்து திருடிய பால்கரை சேர்ந்த 3 பேர் கைது


வல்சாட்டில் வீடு புகுந்து திருடிய பால்கரை சேர்ந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sep 2023 8:00 PM GMT (Updated: 3 Sep 2023 8:00 PM GMT)

வல்சாட்டில் வீடு புகுந்து திருடி வந்த பால்கர் பகுதியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

சில்வாசா,

வல்சாட் மாவட்டத்தில் அடிக்கடி வீடு புகுந்து திருட்டு சம்பவம் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். மேலும் இரவு நேரத்தில் சூரத்-வாபி சாலைகளில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு பார்டி சாலையில் சந்தேகம்படும்படி 3 பேர் நடமாடியதை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் பால்கர் மாவட்டம் விரார் அர்னாலாவை சேர்ந்த சாஜித் அக்பர், வசாய் ஓம்நகரை சேர்ந்த காசிப், நாலாசோப்ராவை சேர்ந்த அன்வர்கான் எனவும், இவர்கள் மீது 7 வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். கடந்த 5 மாதங்களில் மும்பை, பால்கர், வல்சாட் மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு அந்த பணத்தை கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story