சிவசேனா பிரமுகர் கொலையில் 4 பேர் கைது


சிவசேனா பிரமுகர் கொலையில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனா பிரமுகர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தானே,

சிவசேனா பிரமுகர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவசேனா பிரமுகர் கொலை

தானே மாவட்டம் உல்லாஸ்நகர், ஜெய் ஜனதா காலனி பகுதியை சேர்ந்தவர் சபீர் சேக் (வயது45). சிவசேனா சாக்கா பிரமுக் (வார்டு தலைவர்). இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் நடத்தி வரும் சூதாட்ட விடுதி கூடாரத்தில் இருந்தார். அங்கு மர்ம கும்பல் கத்தி, வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தது. அவர்கள் அங்கு இருந்தவர்களை மிரட்டி வெளியே அனுப்பினா். பின்னர் தப்பியோட முயன்ற சபீர் சேக்கை சரமாரியாக குத்தி, வாளால் வெட்டி கொலை செய்தனர்.

4 பேர் கைது

போலீசார் நடத்திய விசாரணையில் விக்ரம் (வயது26) என்பவருக்கும், சபீர் சேக்கிற்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. சமீபத்தில் விக்ரம், சபீர் சேக்கின் சகோதரர் பிரோசிடம் ரூ.5 ஆயிரம் கேட்டார். ஆனால் பிரோஸ் பணம் கொடுக்கவில்லை. மேலும் சபீர் சேக், விக்ரமை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்ரம், நண்பர்களுடன் வந்து சபீர் சேக்கை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவசேனா வார்டு தலைவரை கொலை செய்ததாக விக்ரம், தினேஷ் (23), பிரசாந்த் (24), போரடே (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story