மும்பை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கத்துடன் 4 பேர் கைது; துபாய்க்கு சுற்றுலா சென்று திரும்பியவர்கள்


மும்பை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கத்துடன் 4 பேர் கைது; துபாய்க்கு சுற்றுலா சென்று திரும்பியவர்கள்
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:45 PM GMT)

மும்பை விமான நிலையத்தில் ரூ.2 கிலோ தங்கத்துடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்று திரும்பியவர்கள் ஆவர்.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் ரூ.2 கிலோ தங்கத்துடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்று திரும்பியவர்கள் ஆவர்.

ரூ.1¾ கோடி தங்கம்

துபாயில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு சம்பவத்தன்று விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு குடும்பத்தினரிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள தங்க கட்டி மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1¾ கோடி ஆகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்க கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.

துபாய்க்கு சுற்றுலா

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் நவிமும்பை, வாஷி பகுதியை சேர்ந்த ஈஸ்வர் ரமேஷ், அவரது உறவினர்கள் சவான் வேல்ஜி, ஷியாம் ரமேஷ், குணால் பாலாசாகேப் என்பது தெரியவந்தது. 4 பேரும் துபாய்க்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்தவர்கள் என கூறப்படுகிறது. தங்கத்துடன் கைது செய்யப்பட்ட 4 பேரையும் சுங்க அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.


Next Story