கபடி விளையாடிய கல்லூரி மாணவர் திடீர் சாவு

மும்பை,
மும்பை கோரேகாவ் சந்தோஷ்நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் கிர்திக்ராஜ் மல்லான் (வயது20). இவர் அங்குள்ள கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மலாடு பகுதியில் கபடி போட்டி நடந்தது. இந்த போட்டியில் அவர் கலந்து கொண்டார். விளையாட்டு நடந்த போது திடீரென சரிந்து கீழே விழுந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவரின் சாவிற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






